தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2020, 5:42 PM IST

ETV Bharat / state

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

திருப்பூர்: கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது, பல்லடம் நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியது. பின்னர், அந்த கார் முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் மீதும் மோதி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த பல்லடத்தைச் சேர்ந்த ரவி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரை ஓட்டி சென்ற போட்டோ பிரேம் கடை உரிமையாளர் செந்தில்குமார் (48) என்பவர் படுகாயமடைந்தார். அப்போது அவ்வழியே சென்றவர்கள் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற காவல்துறையினர், விபத்தில் இறந்த ரவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய செந்தில் குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:விளையாட்டில் விபரீதம்: 3 பேர் தாக்கியதில் பட்டியலின இளைஞர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details