திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியில், இருவர் இருசக்கர வாகனத்தில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.