தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2020, 9:55 AM IST

ETV Bharat / state

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் - இருவர் உயிரிழப்பு!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

two-wheeler-car-accident
two-wheeler-car-accident

திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியில், இருவர் இருசக்கர வாகனத்தில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் மாராப்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வம்(56), கோபி(50) ஆகிய இருவரும் மாவு அரைப்பதற்காக கிரிசமுத்திரம் சென்றதும், அங்கு அவர்களின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்தி கார் ஓட்டுநர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:நள்ளிரவில் மோதிக்கொண்ட லாரிகள் - 4 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details