திருப்பத்தூர்: வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 2ஆம் தேதி வாணியம்பாடி சார்பு நீதிமன்ற ஊழியர் ரங்கநாதன் (55) என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ராஜ்குமார் என்பவர் ரங்கநாதனுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து சென்றுள்ளார்.
பின்னர் ரங்கநாதனின் ஏடிஎம் கார்டினை பயன்படுத்தி ரூ.23 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து ரங்கநாதன் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.