தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2020, 4:00 PM IST

ETV Bharat / state

வாணியம்பாடியில் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் நிலோஃபர் கபில் தொடக்கி வைத்தார்.

அமைச்சர் நிலோஃபர் கபில்
அமைச்சர் நிலோஃபர் கபில்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டும் பணி இன்று (நவம்பர் 12) தொடங்கப்பட்டது. அதில் பங்கேற்ற தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், பூமி பூஜை செய்து கட்டட பணிகளை தொடக்கி வைத்தார்.

அதன் பிறகு, பஷீராபாத் பகுதியில் புதிய சாலை அமைக்கும் இடங்களை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி ஆணையர் சென்ன கேசவன், நகர கழக செயலாளர் சதாசிவம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் குமார், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details