திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சுந்தரம்பள்ளி அடுத்த கிருஷ்ணகிரி - திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கந்திலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், உதவி ஆய்வாளர் சாந்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.