தமிழ்நாடு

tamil nadu

உன் மகன், உன்னிடம் வருவான் என்றார் ஜெ., - இன்னும் அது நடக்கவில்லை!

By

Published : Oct 9, 2020, 7:26 PM IST

“இது விசித்திரமான வழக்காகவே உள்ளது. இதை யார்தான் முடிவிற்கு கொண்டு வருவார்கள் எனத் தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் பொழுது, உன் மகன் உன்னிடம் வருவான் என என்னிடம் உறுதியளித்தார். ஆனால் அது நடக்கவேயில்லை” என தனது பேட்டியில் அற்புதம்மாள் தெவித்தார்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

திருப்பத்தூர்:கரோனா தொற்று காரணமாக தனது மகனின் உடல்நிலையை கவனிக்கவே தற்போது பரோல் வாங்கியுள்ளதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளன் 3ஆவது முறையாக 30 நாட்கள் பரோலில் இன்று வீட்டிற்குச் சென்றார். இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, “எனது மகனுக்கு சிறுநீரக தொற்றிற்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக அவன் சரிவர மருத்துவமனைக்கு செல்லவில்லை. மேலும், அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவு. அதனால் தான் அவனுக்கு மருத்துவம் பார்ப்பதற்க்கவே நான் 90 நாட்கள் பரோல் கேட்டிருந்தேன். ஆனால் 30 நாட்கள் தான் கிடைத்துள்ளது.

தண்டனை என்பது எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால், இவ்வழக்கில் மட்டும் நிர்ணயிக்கப்படாத தண்டனையாகவே உள்ளது. அரசு விடுதலை அறிவிக்கின்றது. அமைச்சரவையில், விடுதலை அறிவிக்கின்றனர். தனித்தனியாக ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் முடிந்தும் கையெழுத்து, ஆகவில்லை என்கிறார்கள். இச்சூழலில், ஏழு பேரில் ஒருவருக்குக் கூடவா விடுதலையாகுவதற்கு தகுதியில்லை என்ற கேள்வியெழுகிறது.

நீதிமன்றம் கூறுகிறது, 161 விதியைப் பயன்படுத்தி அரசிடம் பேரறிவாளன் விடுதலையை வேண்டலாம். ஆனால் பல வித குழப்பங்கள் இந்த வழக்கில் உள்ளது. எழுவரை விடுதலை செய்ய சட்டத்தில் தங்களுக்கு இடமளிக்கப்படவில்லை என மாநில அரசு கைவிரிக்கிறது. ஆனால் சட்டத்தை மீறிதான் இந்த வழக்கில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பாமர மக்கள் அனைவரும் அறிந்ததே.

ஆனால் நாங்கள் அதிகாரமற்றவர்கள்; கேட்கமட்டும்தான் முடியும். இந்த வழக்கில் வாக்குமூலம் வாங்கிய அலுவலர்கள் முதல் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வரை பேரறிவாளன் நிரபராதி என்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து சிறையில்தான் இருக்கின்றான்.

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி

இது விசித்திரமான வழக்காகவே உள்ளது. இதை யார்தான் முடிவிற்கு கொண்டு வருவார்கள் எனத் தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் பொழுது, உன் மகன் உன்னிடம் வருவான் என என்னிடம் உறுதியளித்தார். ஆனால் அது நடக்கவேயில்லை.

30 ஆண்டுகள், எனது மகன் வாழ்க்கையை இழந்துவிட்டான், இனிமேலாவது அவனை வாழ விடுங்கள். இனி நாங்கள் கோருவது அவனது விடுதலை மட்டுமே. அனைவரும் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details