தமிழ்நாடு

tamil nadu

முகக் கவசம் இல்லாமல் வெளியே சுற்றியவர்களுக்கு கரோனா பரிசோதனை!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றியவர்களை பிடித்த சுகாதாரத் துறையினர், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

By

Published : Jun 7, 2021, 3:42 PM IST

Published : Jun 7, 2021, 3:42 PM IST

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் நகராட்சி, சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை செய்யும் முகாம் அமைத்திருந்தனர்.

அப்போது அவ்வழியாக முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றியவர்கள் , இரு சக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களையும் நிறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

கரோனா பரிசோதனை

இதனை பார்த்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள், வந்த வழியே திரும்பிச்சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details