தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2020, 8:23 PM IST

ETV Bharat / state

திருப்பத்தூரில் அதிகரிக்கும் கரோனா: 5,379 ஆக பாதிப்பு உயர்வு!

திருப்பத்தூர்: இன்று மட்டும் 79 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,379 ஆக உயர்ந்துள்ளது.

ei
ie

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 5 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. இன்று மட்டும் 79 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,379 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றிலிருந்து 4,814 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 105ஆக உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 94 ஆயிரத்து 119 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2,042 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மேலும் 3,723 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details