தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர்: தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

By

Published : Mar 11, 2020, 7:19 PM IST

girl child safety
Awareness rally on girl child safety

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொன் போஸ்கோ பள்ளிவரை நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்தப் பேரணியில் பெண்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ -மாணவிகள், அரசு துறை அலுவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தல், குழந்தை திருமணங்களை தடுத்தல் குறித்து பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'எய்ம்ஸ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு முட்டுக்கட்டையாகும் வருவாய்த்துறை?'

ABOUT THE AUTHOR

...view details