திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொன் போஸ்கோ பள்ளிவரை நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்தப் பேரணியில் பெண்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ -மாணவிகள், அரசு துறை அலுவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தல், குழந்தை திருமணங்களை தடுத்தல் குறித்து பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.