தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எடப்பாடி பேச்சை எந்த மடையனாவது நம்புவானா..?' - டிடிவி தினகரன் சரவெடி

தூத்துக்குடி: "திமுகவுக்கு  நாங்கள் உதவி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். இதை எந்த மடையனாவது நம்புவானா..?"  என்று அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

By

Published : May 16, 2019, 11:44 AM IST

File pic

இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் சுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

டிடிவி தினகரன் பரப்புரை

அப்போது, மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், "தமிழக மக்கள் துரோகிகளை எப்போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆர்.கே நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கப்பட்டது. நான் வெற்றி பெற்றேன். அதேபோல் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இதனால் தோல்வி பயத்தில் திமுகவுக்கு நாங்கள் உதவி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். இதை எந்த மடையனாவது நம்புவானா..?" என்று கேள்வி எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details