அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: கடம்பூர் ராஜு
தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தூத்துக்குடி கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து இயற்கை வளப் பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-ம் ஆண்டு மினி மாரத்தான் போட்டிகள் 13 வயது வரையும், 14 வயது முதல் 17 வயது வரையும், 18 வயதுக்கு மேல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு, மருத்துவர் எஸ்.தாமோதரன், வனச்சரகர் எஸ்.சிவராம், திருநெல்வேலி கல்லூரி கல்வித்துறை துணை இயக்குநர் எல்.மயிலம்மாள், அதிமுக பிரமுகர் எஸ்.வேல்செல்வி ஆகியோர் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.