அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் எனக் கருத்து கூறியிருந்தோம்.
அதிமுக என்றுமே ஒற்றைத் தலைமையில் தான் இருந்து வந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக அன்று தற்காலிகமாக பொதுக்குழுவில் இரண்டு தலைமையின்கீழ் இயங்கும் என செயல்பட்டு வந்தோம். ஆனால், இன்று பெரும்பாலான மாவட்டச்செயலாளர்கள் இன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக ஒற்றைத்தலைமையினையே விரும்புகின்றனர். பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் அதிக வாக்கு வங்கியுடன் உள்ள எதிர்க் கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒற்றைத் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு 30 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.