தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதாவின் மரண மர்மங்கள் கண்டறியப்படும் - ஸ்டாலின்

தூத்துக்குடி: திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிக் கொண்டுவரப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

By

Published : May 2, 2019, 11:32 PM IST

ஸ்டாலின்


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் அத்தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை, கோரம்பள்ளம், கூட்டாம்புளி ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

"தமிழகத்தில் நடைபெறக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நோக்கத்தோடு, வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் திமுக பொறுப்புக்கு வந்ததும் நிறைவேற்றி தரப்படும்.

ஸ்டாலின் பரப்புரை


மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதற்கு காரணமாக இருப்பவர்கள் ஆட்சியில் உள்ளனர். ஆகவே திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் கண்டறியப்பட்டு வெளிக் கொண்டுவரப்படும்", என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details