தூத்துக்குடி:திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை தொடங்குவதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் கலைஞர் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நடைபெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முன்னிறுத்தி விடியலை நோக்கி என்ற பயணம் தொடர்கிறது. மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்கின்ற ஊழல் ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை தமிழ்நாட்டில் தொடர்வதற்கு இந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும்.
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது அவரது சொந்த விருப்பம். அவர், கட்சி தொடங்கி என்ன சொல்லுகிறார் என பார்ப்போம். இதில், மத்திய அரசு தலையீடு உள்ளதா என்பதை அவரது கட்சியில் யார் யார் இணைகிறார்களோ அதைப்பார்த்தால் தெரியும்.