தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நேற்றிரவு சாலைப்புதூர் விலக்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார், எதிர்பாராவிதமாக முதியோர் மீது மோதி சாலையின் தடுப்பின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரை ஓட்டிவந்த நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்துராஜ், அவரது மனைவி ராஜம், மகள் ரெஜிதா, உறவினர் மேரி ஆகியோரும் படுகாயமடைந்தனர். பின்னர், அவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.