தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக ஆட்சி வந்தால் நாட்டுக்கு நல்லது; வேற கட்சி வந்தா அவங்க வீட்டுக்கு நல்லது'

தூத்துக்குடி: அதிமுக ஆட்சி வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது; வேற கட்சி வந்தா அவங்க வீட்டுக்கு நல்லது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 22, 2021, 3:33 PM IST

minister kadampur raju campaign in thoothukudi
minister kadampur raju campaign in thoothukudi

தமிழ்நாட்டில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் பரப்புரைக்காக கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி, பூசாரிபட்டி, தாமஸ் நகர், மறவர் காலனி, சிந்தாமணி நகர், வடக்கு இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர், பரப்புரையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ”மக்களுக்குச் சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற ஆட்சிதான் அதிமுக ஆட்சி. திமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்றார்கள், ஆனால் கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சி வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது; வேற கட்சி வந்தா அவங்க வீட்டுக்கு நல்லது” என்றார் .

இதையும் படிங்க: 'வானதி அக்கா ஜிந்தாபாத், சப்போர்ட் ஃபார் வேலுமணி' - பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் வடமாநிலப் பெண்கள்

ABOUT THE AUTHOR

...view details