தமிழ்நாட்டில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் பரப்புரைக்காக கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி, பூசாரிபட்டி, தாமஸ் நகர், மறவர் காலனி, சிந்தாமணி நகர், வடக்கு இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.