தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2020, 1:32 AM IST

ETV Bharat / state

மேம்பால சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய முதியவர் மேம்பால சுவரில் மோதி உயிரிழந்தார்.

elderly-man-dies-in-two-wheeler-collision-with-upper-wall
elderly-man-dies-in-two-wheeler-collision-with-upper-wall

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மறவர் காலனியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி தங்கப்பாண்டியன்(60). இவர் இன்று தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். துக்கம் விசாரித்துவிட்டு வீடு திரும்பிய இவர், கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக மேம்பல சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த தங்கப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details