திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில் சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டமுன் வடிவிற்கு குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் ஒப்புதல் வழங்க வேண்டும். விவசாயிகளின் பல கட்ட போராட்டங்களால்தான், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.