திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள அத்திக்கடையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் அத்திக்கடை கிளைத் தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் பா.அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தக் கூடிய இத்தகைய கறுப்புச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று ஒவ்வொரு நாளும் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியா முழுவதும் 11 மாநிலங்கள் இந்த கறுப்புச் சட்டத்தை எங்களுடைய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிக்கின்றனர். அது போல், தமிழ்நாடு அரசும் உடனடியாக இந்த கறுப்பு சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.