திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர். அங்கு இந்த ஆண்டு சரியான நேரத்தில் பெய்த பருவமழையினால் சிறப்பான முறையில் சாகுபடி நடைபெற்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்தது . இதனால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவசரமாக அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.