மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, உரக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. மானிய விலையில் உரம் மற்றும் இடுபொருள்கள் பெற ஆன்லைன் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக உரக்கடை விற்பனையாளர்கள் வங்கிகளுக்குச் சென்று QR கோடுகளைப் பெற்று தங்களது கடைகளில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கான சுற்றறிக்கையை திருவாரூர் மாவட்டத்திலுள்ள உரக் கடைகளில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.