திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மஞ்சக்குடி தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் மேலாண்மை பேரிடர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கூடுதல் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 1,116 முதியோர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் அமைச்சர் காமராஜிடம் சில கேள்விகள் எழுப்பினர். உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என முதலமைச்சர் கூறியதற்கு,’ எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என ஸ்டாலின் பதிலளித்துள்ளாரே?
“அரசியலில் முதிர்ச்சி வேண்டும். ஆனால் இந்தப் பதில் ஸ்டாலினுக்கு முதிர்ச்சி இல்லாததைக் காட்டுகிறது. இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டில் கிராமப்புற மற்றும் நகர்புற அரசு பள்ளிகளில் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.