தமிழ்நாடு

tamil nadu

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

By

Published : May 20, 2020, 9:27 PM IST

திருவாரூர்: மன்னார்குடியில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர் உள்ளிட்ட உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், மதுக் கடைகளை மீண்டும் மூட வேண்டும், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கலைச்செல்வன், மாவட்டத் தலைவர் மணி, வி.எம்.கலியபெருமாள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மத்திய அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details