தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருவண்ணாமலை: பணி மாறுதல் காரணமாக மன உளைச்சல் அடைந்த அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jan 20, 2020, 6:06 PM IST

அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தீபம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் குடியிருப்புக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் குடிபோதையில் விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், திருவண்ணாமலை வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து வெளியூருக்கு பணிமாறுதல் கிடைத்துள்ளது எனவும், திருவண்ணாமலையில் அவரது குழந்தைகளின் பள்ளிப்படிப்பு தொடர்வதால் வெளியூருக்கு செல்ல முடியாத நிலையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஆவின் பொதுமேலாளர் திட்டியதால் ஊழியர் தற்கொலை முயற்சி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details