திருவண்ணாமலை:அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் கம்பன் செய்தியாளர்கள் சந்திப்பில், ”அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று கல்லூரி செயல்பட்டு வருகிறது. அருணை மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறையில் பல்வேறு துறைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் துறை சார்ந்த வல்லுநர்கள் பணி அமர்த்தப்பட்டு சிறப்பாக மருத்துவ சேவை செய்து வருகின்றனர்.
நாட்டில் உள்ள முக்கிய நோய்களில் மனிதர்கள் இதய நோயால் அதிகம் உயிரிழக்கக் கூடிய சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. வயது வித்தியாசம் இன்றி இந்த நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலையில் இதய நோய் சிகிச்சை தொடர்பான மருத்துவமனையில் ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இதய அறுவை சிகிச்சை அரங்கம் துவங்கப்பட்டுள்ளது.
ஐந்து நபர்களுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை என்பது சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டும் செய்யப்படக்கூடிய நிலையில், தற்போது திருவண்ணாமலையில் துவங்கப்பட்டு சிறப்பாக 5 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது’ என மருத்துவக் கல்லூரி இயக்குநர் தெரிவித்தார்.