திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் செய்யாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். மேலும் பள்ளி வளர்ச்சிக்காக அவர் சொந்தப் பணத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.