திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள ஈசானிய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதை திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 64 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 10 பேர் மட்டுமே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முழுமையாக குணமடைந்துவிட்டார். சிகிச்சை பெற்று வரும் ஒன்பது பேர் ஆரோக்கியமாக உள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 7 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வருகின்ற வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் அவர்களுக்கு வேகமான முறையில் சோதனை செய்யப்படும்.