தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2020, 8:42 AM IST

ETV Bharat / state

இரையை விழுங்கி நகர முடியாமல் தவித்த பாம்பு - குடியிருப்பு வாசிகள் அச்சம்

திருவண்ணாமலை: இரையை விழுங்கி நகர முடியாமல் தவித்த நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அதனை பத்திரமாக கொண்டு சென்று வனப் பகுதிக்குள் விட்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு அருகே உள்ளது தனலட்சுமி நகர் குடியிருப்பு பகுதி. இங்கு, நல்ல பாம்பு ஒன்று இரையை விழுங்கியதால் நகர முடியாமல் ஒரே இடத்திலேயே இருந்ததைக் கண்ட அப்பகுதி வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நகர முடியாமல் தவித்துவந்த நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பின்னர் பாம்பு பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பெரிய பைப்பிற்குள் பாம்பை பத்திரமாக அடைக்க முற்பட்டனர், அப்போது பாம்பு படமெடுத்து சீறியது. இருப்பினம், தீயணைப்புத் துறை வீரர்களின் முயற்சியால் பைப்பிற்குள் பாம்பு அடைக்கப்பட்டது.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு

இதனையடுத்து பாம்பை வனப் பகுதியில் சென்று தீயணைப்பு வீரர்கள் உயிருடன் விட்டனர். குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க:கோழி முட்டைகளைக் கக்கிய நல்ல பாம்பு - மெய்சிலிர்க்கும் காட்சி!

ABOUT THE AUTHOR

...view details