திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மிகவும் பழமை வாய்ந்த அனுப்பாம்பிகை ரிஷபேஸ்வவர் ஆலயம் உள்ளது. சனி மஹாப் பிரதோஷத்தை முன்னிட்டு ரிஷபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு பூஜை ஆராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனுபாம்பிகையுடன் ரிஷிபேஸ்வரர் அலங்கார பல்லக்கில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.