தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 1, 2020, 10:28 AM IST

ETV Bharat / state

144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிப்பு: தினக்கூலிகள் வேதனை

திருவண்ணாமலை: 144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாய தினக்கூலிகள் வேதனை தெரிவித்தனர்.

daily wages affected due to the curfew of coronavirus
daily wages affected due to the curfew of coronavirus

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரசைக் கட்டுப்டுத்தும்விதமாக இந்தியாவில் 21 நாள்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் தங்களது அன்றாட தேவைகளுக்கே அரசை எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கே பணமின்றி தினக்கூலிகள் தவித்துவருகின்றனர். இந்நிலையில், தங்களது பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும்பொருட்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியிலுள்ள விவசாய தினக்கூலிகள் சிலர் விவசாயப் பணிகளை மேற்கொள்ள தயாராகிவருகின்றனர்.

தற்போது விவசாயப் பணிகளைச் செய்ய குறைவான ஆள்களே முன்வந்துள்ளதால், பணியாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு தங்களது பணிகளைச் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் தங்களது முகங்களை மூடிக்கொள்ளவும், சில முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து விவசாயக் கூலிகள் பேசுகையில்,

இந்தக் கரோனா பாதிப்பிலிருந்து நாடு விரைவில் திரும்ப வேண்டும் எனவும், தங்களது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்காவது பொருளாதாரத் தேவைகளை அரசு அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவிக்கும்போது மெளனம் சாதிக்கும் உள்துறை அமைச்சர் - கபில் சிபல்!

ABOUT THE AUTHOR

...view details