திருவண்ணாமலையில் கடந்த 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சூரியன் மறையும் நேரத்தில் பி.ஆர்.கே. சுவாமி என்பவர், வானில் சூரியன் மறையும் நேரத்தில் கீழ்வானத்திலிருந்து நடுவானம் வரை தீ போன்று ஒளி பரவியிருந்ததை போன்றஒரு ரம்மியமான காட்சியைக் கண்டுள்ளார். உடனே, அக்காட்சியை புகைப்படமாகவும், வீடியோவாகவும் அவர் பதிவுசெய்து தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்த அவருடைய நண்பர் முருகானந்தம், அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்தக்காட்சியை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த மக்களாலும், சென்னையிலிருந்த மக்களாலும் பார்க்க முடிந்துள்ளது. இந்த ரம்மியமான காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.