திருவண்ணாமலை:ஆரணி டவுன் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் அரசு நிதி உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் மாணவ மாணவிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் பயின்றுவருகின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் பணியாற்றிவருகின்றனர்.
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் ஒமைக்ரான், கரோனா தொற்று அதிகரித்துவருவதால் தமிழ்நாடு அரசு 1-8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடைவிதித்துள்ளது.
ஆனால் 9, 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் 9, 10, 11, 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.