தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 24, 2019, 12:19 PM IST

ETV Bharat / state

திடீரென வெடித்துச் சிதறிய டிவி: அலறியடித்து ஓடிய பெண்!

திருவள்ளூர்: திருத்தணியில் அதிக மின் அழுத்தத்தின் காரணமாக வீட்டில் இருந்த டிவி வெடித்ததால் பெண் ஒருவர் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

கரும்புகை சூழ்ந்த வீட்டை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அக்கைய நாயுடு தெருவில் வசிப்பவர் கூலித்தொழிலாளி அஸ்லாம் பாஷா. இவரது மனைவி நூர்ஜகான் புதன்கிழமை வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென டிவி வெடித்தது. இதனால் வீட்டில் இருந்த மின்சார கேபிள் அனைத்தும் எரிந்து கரும்புகை சூழ்ந்ததால் நூர்ஜகான் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்த மின்சார கேபிளை துண்டித்தனர்.

வெடித்துச் சிதறிய டிவியால் கரும்புகை

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சூழ்ந்திருந்த கரும்புகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து மின்சாரத் துறையினர் ஆய்வு செய்ததில் அதிக அளவு மின் அழுத்தத்தின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : வேலூரில் வெடித்த மர்மப் பொருள்? - நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த தம்பதி

ABOUT THE AUTHOR

...view details