திருவள்ளுர்: தமிழ்நாடு அரசு கிராம, பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பைச் சேர்ந்த செவிலியர்கள் இன்று (நவ.19) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு தலைவர் தனலட்சுமி, "மெகா கரோனா சிறப்பு முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை நடத்த வேண்டும். கரோனா முகாமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.
தடுப்பூசி (Covid 19 vaccine) செலுத்துவதில் இலக்கு நிர்ணயம் செய்யக்கூடாது. வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதால் தடுப்பூசியின் வீரியம் குறைய வாய்ப்பு உள்ளதால் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்த வேண்டும்.