தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2019, 5:18 AM IST

ETV Bharat / state

தனியார் பள்ளி சார்பில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்!

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியின் சார்பாக இயற்கை பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

uthukottai vivekananda School

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியின் சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பள்ளியின் தாளாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊத்துகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் அண்ணாநகர் வழியாக செல்லியம்மன் கோயில் சென்று முடிவடைந்தது.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இதையடுத்து, இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியின் சார்பாக காவல் துறையை மேப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசசோலை வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன், வட்டாட்சியர் இளவரசி, செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'கோவையில் பெண்ணை கொலை செய்துவிட்டு கடைக்கு தீ'

ABOUT THE AUTHOR

...view details