திருவள்ளூர் அடுத்து திருத்தணி ஜெ.ஜெ.நகர்ப்பகுதியில் வசிப்பவர், மோகன். 35 வயதான இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மோகன் தனது வீட்டுக்கு ஜெ.ஜெ.நகர் பிரதானசாலையில் சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர், இவரை சரமாரியாக முகம், மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் கத்தியைக்கொண்டு வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார்.
இதனை அந்தப்பகுதி வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் பொதுமக்களுக்கும், மோகனின் உறவினருக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்தார். அதனை அடுத்து உடனடியாக மோகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச்சென்று போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.