தமிழ்நாடு

tamil nadu

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி- இருவர் கைது!

By

Published : Jan 14, 2020, 5:03 PM IST

திருவள்ளூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பெண் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

cheating case
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் கல்யாணசுந்தரம் தெருவில் வசித்து வருபவர்கள் ரம்யா- கார்த்திக் தம்பதி. இவர்கள் இருவருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 40 ஆயிரத்தை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, மணிகண்டன் என்ற இருவர் வாங்கியுள்ளனர். அதில், கணவர் கார்த்திக்கு கோயம்புத்தூரில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் கம்பவுண்டர் வேலையும், மனைவி ரம்யாவுக்கு பொதுப்பணித்துறையில் வேலையும் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்

ஆனால், அவர்கள் வேலை வாங்கி தரமால் இழுத்தடித்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த ரம்யா- கார்த்திக் தம்பதியினர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்தற்கும் தராமல் ஏமாற்றியுள்ளனர்.

திருவள்ளூரில் அரசு வேலை வாங்கி தருவதாக மோச

இதையடுத்து, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ராஜலட்சுமி , மணிகண்டன் இருவர் மீதும் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் ரம்யா-கார்த்திக் தம்பதி புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொன்னேரி காவல் துறையினர், ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இரண்டு வயது குழந்தையை கடத்தியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details