தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2019, 11:24 PM IST

ETV Bharat / state

கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்

திருவள்ளூர்: அயத்தூரில் கல்லூரி மாணவனை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பலை கைது செய்யக்கோரி உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கஞ்சா கும்பல் மாணவனின் வீடு முன்பு வந்து கத்தியை காட்டி மிரட்டல்
கஞ்சா கும்பல் மாணவனின் வீடு முன்பு வந்து கத்தியை காட்டி மிரட்டல்

திருவள்ளூர் மாவட்டம் அயத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் தனியார் கல்லூரியில் படித்துவரும் நிலையில், நேற்றிரவு இவரது இரு சக்கர வாகனத்தை மறித்து 3 பேர் கொண்ட கஞ்சா கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய விக்ரமனை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவனை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து கஞ்சா கும்பல் மாணவனின் வீடு முன்பு வந்து கத்தியை காட்டி உறவினர்களை மிரட்டிச் சென்றுள்ளனர். இதனையடுத்து கஞ்சா கும்பலை கைது செய்ய வலியுறுத்தி மாணவனின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கஞ்சா கும்பல் மாணவனின் வீடு முன்பு வந்து கத்தியை காட்டி மிரட்டல்

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அந்த 3 பேர் கொண்ட கும்பல் அயத்தூர் அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அஜித் குமார், வல்லரசு என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் தலையை வெட்டிய பெண் வீட்டாரின் கொடூரச் செயல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details