திருவள்ளூரை அடுத்த புட்லூர் பகுதியில் சாலையில் நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஒடினர். சிலர் அதை அடிக்க முற்பட்டனர்.
நல்ல பாம்பை வளர்க்கும் இளைஞர்!
திருவள்ளூர்: சாலையில் வந்த நல்ல பாம்பின் பல்லை பிடுங்கிய நபரை அவ்வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
snake
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் பாம்பை அடிப்பவர்களை தடுத்து நிறுத்தினார். பின் அந்த பாம்பை பிடித்து அதன் பல்லை பிடுங்கினார். அதன் பின் சிறிது நேரம் அப்பகுதி சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டினார்.
இது குறித்து யுவராஜிடம் கேட்டபோது, ”சிறுவயது முதலே பாம்பு என்றால் பிடிக்கும். நான் ஏற்கனவே சில பாம்புகளை வளர்த்துள்ளேன் தற்போதும் வீட்டில் இரண்டு பாம்புகள் உள்ளன. இந்த பாம்பையும் அதில் சேர்த்து வளர்க்கப் போகிறேன்”என்றார்.
Last Updated : Apr 7, 2020, 1:55 PM IST