தமிழ்நாடு

tamil nadu

'பெண் கல்வியைப் போற்றுவோம்', பெண்களைப் பாதுகாப்போம்' - சர்வதேச மகளிர் தினத்தில் உறுதிமொழி!

By

Published : Oct 12, 2019, 7:33 AM IST

திருவள்ளூர்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 'பெண் கல்வியைப் போற்றுவோம்', 'பெண்களைப் பாதுகாப்போம்' என உறுதிமொழி எடுத்தனர்.

International Women's Day

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைப் போற்றும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கையெழுத்தும் உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பரிசுபெற்ற மாணவிகள்

இதில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்துகொண்டனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு தொடர்ந்து 'பெண்களைப் பாதுகாப்போம்', 'பெண் கல்வியைப் போற்றுவோம்' என்ற உறுதிமொழி ஏற்றனர். இதில் பள்ளியின் ஆசிரியைகள் 'பெண் கல்வியைப் போற்றுவோம்', பெண்களைப் பாதுகாப்போம்' என உறுதிபூண்டு கையெழுத்திட்டனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி

ABOUT THE AUTHOR

...view details