தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மோதியதில் தலை நசுங்கி ஒருவர் பலி!

திருவள்ளூர்: திருத்தணியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

By

Published : Sep 22, 2019, 9:41 AM IST

விபத்து ஏற்படுத்திய லாரி

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன், கோபால் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருத்தணி அருகில் உள்ள ஆசிரியர் நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.

லாரி மோதியதில் தலை நசுங்கி உயிரிழந்தார்

இதில், தாமரைச்செல்வன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார், கோபால் படுகாயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் யாரென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் துறைக்கு அஞ்சி வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.!!

ABOUT THE AUTHOR

...view details