தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனிமலர் கல்லூரியில் இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டும் கருத்தரங்கம்!

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

By

Published : Oct 3, 2019, 5:56 AM IST

தன்னம்பிக்கையூட்டும் கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியும், வேர்ல்ட் ஹுய்மனிடேரியன் ட்ரைவ் (WHD) என்ற சர்வதேசத் தொண்டு அமைப்பும் இணைந்து இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

கல்லூரியின் தலைவர் சின்னதுரை தலைமையில் மலேசிய தூதுரக தலைவர் சரவணன் கராதிஹ்யான், ரஷ்ய தூதுரக உயர் அலுவலர் அலெக்சேய் இல்லுவியேவ், மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நாளைய தலைமுறையினர், வேலை வாய்ப்பு, சுய தொழில், நன்னடத்தை வாழ்க்கை நெறி முறைகள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளைக் கூறினார்.

தன்னம்பிக்கையூட்டும் கருத்தரங்கம்

இந்த கருத்தரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதையும் படிங்க: கரைவேட்டி கலைஞரும் ஒரு தமிழன்தான் - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details