தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2020, 12:09 PM IST

ETV Bharat / state

ரவுடிகள் இருவர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது!

திருவள்ளூர்: ஆலாடு பகுதியில் ரவுடிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கொலை செய்யப்பட்ட ரவுடிகள் சுதாகர், வீரா
கொலை செய்யப்பட்ட ரவுடிகள் சுதாகர், வீரா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியில், அப்பகுதி இளைஞர்களுக்கும், பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த 8ஆம் தேதி வாலிபால் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

திடீரென்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சுதாகர், வீரா ஆகியோர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சடலமாக கிடந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆலாடு பகுதியைச் சேர்ந்த சுகன், தீபன், ரஞ்சித், ஜெயப்பிரகாஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் நண்பர்களின் காதல் விவாகரத்தில் இருவரும் தலையிட்டதன் காரணமாக, ஆத்திரத்தில் இருவரையும் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக நான்கு பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

கொலை செய்யப்பட்ட ரவுடிகள் சுதாகர், வீரா

இதையடுத்து நான்கு பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வாலிபால் விளையாட்டில் தகராறு: கல்லைப் போட்டு இருவர் கொலை!

ABOUT THE AUTHOR

...view details