தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2019, 9:39 AM IST

ETV Bharat / state

தேர்தல் பறக்கும் படை வாகனம் விபத்து: தலைமைக் காவலர் உயிரிழப்பு!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி தலைமைக் காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

EC flying squad vehicle met an accident near Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி தேர்தல் பறக்கும் படை பிரிவு வாகனம் புதுவாயல் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி ஒன்று அதனை மோதும் நிலையில் வந்துள்ளது. இதனால் சாலையோரமாக சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தலைமைக் காவலர் கோவிந்தசாமி (54) பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் காரில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் (44), ஓட்டுநர் கண்ணன், காவலர்கள் கமலநாதன் (37), லாசர் (54), இந்துமதி (21) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த காவலர் கோவிந்தசாமியின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கவரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details