தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல் - 100க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு

திருவள்ளூர்: புட்லூரில் திமுக ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தலில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாக்களித்தனர்.

By

Published : Mar 5, 2020, 5:46 PM IST

Updated : Mar 5, 2020, 11:42 PM IST

திமுக ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல்
திமுக ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல்

திருவள்ளூரை அடுத்த புட்லூரில் திமுக ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தலானது மாவட்ட ஒன்றிய திமுக செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆவடி நகர செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு தேர்தலை தொடங்கிவைத்தார்.

ஊராட்சித் தலைவர், செயலாளர், ஊராட்சி அவைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

மேலும் இதில் ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் மகிமை தாஸ், நிர்வாகிகள் விஜயன், லாசர், ஜெயக்குமார், அசோக் குமார், குணசேகரன், மல்லிகா, சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திமுக ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல்

இதையும் படிங்க: காலையில் அதிமுக அணி... மாலையில் திமுக அணி!

Last Updated : Mar 5, 2020, 11:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details