திருவள்ளூரை அடுத்த புட்லூரில் திமுக ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தலானது மாவட்ட ஒன்றிய திமுக செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆவடி நகர செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு தேர்தலை தொடங்கிவைத்தார்.
ஊராட்சித் தலைவர், செயலாளர், ஊராட்சி அவைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.