தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக் மீது வேன் மோதி விபத்து - பெற்றோர்களின் கண்ணெதிரே 4 வயது மகன் உயிரிழப்பு!

திருவள்ளூர்: மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த வேன் மோதி கணவன் மனைவியின் கண்ணெதிரே நான்கு வயது மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Dec 10, 2019, 10:41 PM IST

bike accident
பைக் மீது வேன் மோதி விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் துக்காராம்(33). இவருக்கு குட்டி தேவி என்கின்ற மனைவியும், நான்கு வயதில் பரத் என்கின்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் துக்காராம் மப்பேடு பகுதியில் துணிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று தனது குடும்பத்துடன் வேலையின் காரணமாக, வளர்புரத்திற்கு பைக்கில் சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்த வேலையில், பின்னால் வந்த வேன் அவர்களின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில், பெற்றோர்களின் கண்ணெதிரே, மகன் பரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

பைக் மீது வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த திரளான மக்கள், வேன் டிரைவரை கைது செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறுவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details