தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 3, 2021, 10:10 PM IST

ETV Bharat / state

குளத்தில் குளிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

நெல்லை: குளத்தில் குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

nellai young man dead
nellai young man dead

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே கார்மேகனார் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் ஹரிராமச்சந்திரன் (21). இவர் இன்று (பிப்.3) தங்கள் ஊர் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிராமச்சந்திரன் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதையடுத்து, அவரது நண்பர்களும், ஊர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மூழ்கிய ஹரிராமச்சந்திரனை தீவிரமாக தேடினர்.

இந்நிலையில், தற்போது ஹரி ராமச்சந்திரன் உயிரிழந்த நிலையில் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய சிவந்திபட்டி காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளிக்கச் சென்ற போது இளைஞர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாகையில் தீ விபத்து - ஏழு வீடுகள் தீயில் கருகி நாசம்!

ABOUT THE AUTHOR

...view details