திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நீராதாரமாக இருந்து வரும் தாமிரபரணி ஆற்றின் மூலம் பயன் பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் நீர்வாழ் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு, திருநெல்வேலி தூத்துக்குடி நேச்சர் கிளப் அமைப்பு சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதி கால் பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
11ஆவது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என 200 பேர் பங்கேற்று பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பறவைகளை இனம், ரகம் வாரியாக அவைகளை நேரில் கண்டு அவற்றின் எச்சம், கால்தடம், கூடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர்.