கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, ஊரடங்கு உத்தரவின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள திரை அரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதிவரை மக்கள் வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும்பட்சத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.