திருநெல்வேலி: திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மூன்றாவது மகள் சந்தியா (18) இவர் நெல்லை உள்ள கடை ஒன்றில் பணி செய்து வந்தார். நேற்று (அக் 02) வழக்கம் போல் கடைக்குத் தேவையான பொருட்களை அதே பகுதியில் உள்ள குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சந்தியா குடோனுக்குச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கடைக்குத் திரும்பாததால் சந்தேகம் அடைந்த சக பெண் ஊழியர்கள் குடோனுக்குச் சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் சந்தியா உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சந்தியாவின் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில் சந்தியா பணிபுரிந்த கடையின் பக்கத்துக் கடையில் வேலை செய்து வந்த ஒருவர் சந்தியாவை அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவன் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதும் காதல் விவகாரத்தில் சந்தியாவை அச்சிறுவன் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதன் அடுத்து மேற்கொண்ட விரிவான விசாரணையில், நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் சந்தியாவுடன் நட்பாகப் பழகி பின்னர் சந்தியாவை காதலித்துள்ளான். முதலில் சந்தியாவும் சிறுவனைக் காதலித்ததாகவும் பின்னர் சில காரணங்களுக்காக சந்தியா அச்சிறுவனுடனான காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.